கடந்த திமுக ஆட்சியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது தமிழக அர சு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரை மாற்றம் செய்துள்ளது..இந்த காலை உணவு, இனி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு, மொத்தம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் வரும் செப்டம்பர் 17 -ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாள் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. .

