Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன

by Admin

கல்வி
நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன

நாளை காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளது.. பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடநூல்களை உடனே வழங்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு தகவல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Share via
Advertiment

More Stories

Ads