Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆர்யன்கானுடன் செல்ஃபி எடுத்தவர் கைது?

by Editor

சினிமா
ஆர்யன்கானுடன் செல்ஃபி எடுத்தவர் கைது?

ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் (என்சிபி) கைது செய்யப்படும்போது, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட தனியார் துப்புரவாளர் கிரண் கோஸ்வாமியை கைது செய்ய புனே காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆர்யன் கான் வழக்கில், கிரண் கோஸ்வாமியை சாட்சியாக என்சிபி சேர்த்துள்ளது.

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக சின்மய் தேஸ்முக் என்பவரிடம் ரூ. 3.09 லட்சம் பண மோசடி செய்தது தொடர்பாக, மே 29, 2018 தேதி பர்ஷனா காவல் நிலையத்தில் கிரண் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், 2007 ஆம் ஆண்டு அந்தேரி காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு தானே காவல்நிலையத்தில் இரண்டு வழக்கும் கேஸ்வாமி மீது பதியப்பட்டுள்ளன.

கிரண் கோஸ்வாமியை கைது செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள புனே காவல் ஆணையர் அமிதாப் குப்தா, அவர் நாட்டை விட்டுத் தப்பிவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

Share via
Advertiment
Ads