Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை

by Editor

சினிமா
சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை

 

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை சௌஜன்யா, ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். இவர் 2 கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.


இந்த நிலையில் சௌஜன்யா பெங்களூருவில் உள்ள கும்பல்கோடு பகுதியில் இருக்கும் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கதவை உடைத்து சௌஜன்யாவின் உடலை மீட்டுள்ளனர்.


மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது நண்பர்கள், உடன் நடித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்னறனர். மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் எழுதிய கடிதம் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில் தனது தற்கொலைக்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தற்கொலை முடிவெடுத்ததற்காக தன் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். 

Share via
Advertiment
Ads