Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

விக்னேஷ் சிவன் நயனதாரா தம்பதிகள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றனர்.

by Admin

சினிமா
விக்னேஷ் சிவன் நயனதாரா தம்பதிகள் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றனர்.

 பங்குனி உத்திரம் குலதெய்வ கோவிலில் வழிபடுவது என்பது காலங்காலமாக இருந்து வரும் சம்பிரதாயம் இதன் அடிப்படையில் விக்னேஷ் சிவன் நயனதாரா தம்பதிகள் தங்களுடைய குல தெய்வமான கும்பகோணம் கிராமத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றனர். கோயில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் சார்ந்த கோயில்.   அதனால் விக்னேஷ் சிவன் நயன்தாரா வருவதை அறிந்து உள்ளூரில் இருக்கக்கூடிய கிராமத்து மக்கள் அவர்களை காண வருகை தந்திருந்தனர். பெரும் கூட்டத்திற்கு மத்தியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா அந்த கோவிலில் சாமி கும்பிட்டு அதற்கு அடுத்து ஐராதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்தனர். சாமி தரிசனம் முடித்து அவர்கள் திருச்சி வந்த பொழுதும் கூட்டம் கூடி தாய்மார்களும் இளைஞர்களும் மாணவிகளும் என படையெடுத்து வந்து செல்பி களை எடுத்து தள்ளினர். குலதெய்வ கோவிலில் சாமி கும்பிடுகிற பொழுது ரசிகர்களுடைய இந்த தொல்லை நயனதாராவினுடைய இறை வழிபாட்டு சிந்தனையில் இடபாடுர்  ஏற்பட்டதாக கருதி கோபமாகவே காட்சி இருந்தார். சில நேரங்களில் இயல்பு நிலைக்கு மாறி வந்தவர் தன்னுடைய ரசிகர்களிடம் அன்பாக சிரித்தபடியும் செல்பி எடுத்தும் சென்றார்

Share via
Advertiment
Ads