Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னையில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்போட்டி

by Admin

விளையாட்டு
சென்னையில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.டெஸ்ட் போட்டிகளில் 4-2 இரண்டு வெற்றிபெற்ற இந்தியா பாா்டா் கவாஸ்கர் கோப்பையைக்கைப்பற்றியது.இதனைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டியில்இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1-1 என்கிற கணக்கில் உள்ளனர். இந்நிலையில், நாளை  மூன்றாவது  ஒரு நாள்  போட்டி சென்னை  எம்.ஏ.சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் ,இந்தியா வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் இந்தியா உள்ளது.சென்னை மைதானம் எப்பொழுதும் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும்  நாளை இந்திய அணி பெரும் முனைப்போடு களத்தில் இறங்கி விளையாட வேண்டும்.சாதாரணமாக வெற்றி  பெற்று விடலாம் என்கிற  நம்பிக்கையில் இல்லாமல்  தம் விளையாட்டு உத்திகளை களத்தில் காட்டத் தயங்க கூடாதென்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Share via
Advertiment
Ads