Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கே ஜி எஃப் 3 யை தொடங்கியது படக்குழு

by Staff

சினிமா
 கே ஜி எஃப் 3 யை தொடங்கியது படக்குழு

'ராக்கி பாய்'  கோபம், தாய் பாசம் ஆக் ஷன் என கலந்து கட்டி அடித்திருக்கிறார்  நடிகர் யாஷ், இந்தத் திரைப்படம் இந்திய அளவில் அவரது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இப்படத்தின் முதற்பாகம் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்து இருக்கிறது.

கேஜிஎப் 2 திரைப்படம் நான்கு நாட்களில் ரூபாய் 500 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் எடுக்க தயாரிப்பாளர்கள் கூடுதல் உத்வேகத்தை  கொடுத்திருப்பதாகவும், கே ஜி எஸ் 3 முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
 

Share via
Advertiment
Ads