Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மலசிக்கல் இல்லையேல் உடலில் ஒரு சிக்கல் இல்லை....

by Admin

லைப் ஸ்டைல்
மலசிக்கல் இல்லையேல் உடலில் ஒரு சிக்கல் இல்லை....

மலசிக்கல் இல்லையேல் உடலில் ஒரு சிக்கல் இல்லை....

            நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த பழுப்பு அல்லது சிவப்பு அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு மற்றும் சிறுதானியங்கள்  மலச்சிக்கலை தவிர்க்க உதவும். 

         பச்சை நிற காய்கறிகள், வாழைத்தண்டு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

       தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.

        காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறுகளை அதிகம் அருந்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு வாழை பழங்களைச் சாப்பிடும் சிறிது நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

        தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்
 
    மலம் கழிப்பதற்கென போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம்

       சில மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் மலச்சிக்கல் ஏற்படலாம். உதாரணத்துக்கு இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படும்

        உணவு உண்ணும் போது பேசிக்கொண்டோ அல்லது டிவி பார்த்துக் கொண்டோ அல்லது மொபைல் போன் பார்த்து கொண்டோ சாப்பிடுவது மிகவும் தவறான செயல் இவ்வாறு செய்வதால் இயற்கையாகவே வாயில் சுரக்கும் உமிழ் நீர் தடைபடுகிறது....

  அது போல சிலர் மலம் கழிக்க செல்லும் போது கூட மொபைல் போனை பார்த்து கொண்டே மலம் கழிக்கிறார்கள் இவ்வாறு செய்வதால் நாளடைவில் பெருமளவில் மலச்சிக்கல் வரும்... வயதாகும்போது மிகவும் மலச்சிக்கலால் அவதிப்பட வேண்டும் ஆகையால் மலம் கழிக்கும் போது போனை எடுத்து கொண்டு செல்ல வேண்டாம்.

Share via
Advertiment
Ads