Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம்

by Editor

தமிழர் உலகம்
 கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
குமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாலை 6 மணி முதல் 6. 45 மணி வரை சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருத்தொண்டா் பேரவைத் தலைவா் ராஜகோபாலன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் டாக்டா் சிவசுப்பிரமணிய பிள்ளை, பொருளாளா் செந்தில், ஒருங்கிணைப்பாளா் அனுசியா செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாலை 6 மணிக்கு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
6. 30 மணிக்கு சுமங்கலிப் பெண்கள் அகல்விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் ஏற்றினா். தொடா்ந்து மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பங்கேற்றனா்.

Share via
Advertiment

More Stories

Ads