Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா சென்னை வரும் பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

by Editor

விளையாட்டு
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா சென்னை வரும் பிரதமர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கும் நிலையில் பாதுகாப்பு மற்றும் பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னை, பெரிய மேட்டில் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை 4.45 மணி அளவில் சென்னை வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 22 ஆயிரம் போலீசார் ஐந்து அடுக்கு பாதுகாப்பில் நாளை ஈடுபட இருக்கிறார்கள். மேலும் ட்ரோன்கள் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்குப் பிரதமர் வரும் சாலை விழுவதுமாகவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


 

Share via
Advertiment

More Stories

Ads